தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை

நண்பர்களே  உங்களுடைய குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளவும்.   எழுதி வைத்த குறிப்புகளை தேவைப்படும் பொழுது படிக்கவும்.  உங்களுடைய பர்சனல் விவகாரங்களை ஆன் டைரியில் எழுதி வைக்கவும். ஒரு மென்பொருள் உள்ளது.  இதன் பெயர் ஞாபகம் என்பதை நினைவு படுத்தும் வகையில் Nyabag என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.  இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேசன் கிடையாது.   இதனால் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ தேவையில்லை.  இது ஒரு வெப் அப்ளிகேசன் ஆகும். 

இதன் டைரி பகுதியில் அன்றைய பொழுது குறித்து எழுதும் பொழுது எந்த மாதிரி மன நிலையில் இருந்தீர்கள் என்று Smilies தேர்வு செய்ய முடியும்.

உதாரணத்திற்கு காதல் மூடில் இருந்தீர்கள் என்றால் Smiliey இரண்டு கண்களும் இதயமாகவும் மாறி உங்களை காதல் மூடிற்கு மாற்றி விடும்.

இதே நீங்கள் கோபமாக இருந்தீர்கள் என்றால் வேறு மாதிரியும் காட்டும் Smiliesகள் உள்ளன.

இதன் மூலம் அன்றைய பொழுது எவ்வாறு இருந்திருக்கும் என்று உங்கள் டைரியினை படிக்காமலேயே உங்கள் Smiliey மூலம் தெரிந்து கொள்வீர்கள்.





இவர்களுடைய டைரி பகுதியில் பதினான்கு வகையான Smilieகள் உள்ளன.

இவர்களுடைய  இந்த அப்ளிகேசனில் டாஸ்க் என்ற பகுதியில் உங்களுடைய அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மற்றும் உங்களுடைய நினைவூட்டல்களை பதிந்து வைத்தால் உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு நினைவூட்டல் செய்யும்.

இந்த இணையத்தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதுமானது உடனே சேர்ந்து கொள்ளலாம்.

இந்த மென்பொருள் பீட்டா அளவில் இருப்பதால் இன்னும் நிறைய வசதிகள் செய்து தருவார்கள் என நம்பலாம்.  அத்துடன் இந்த மென்பொருள் vheeds.com நிறுவனத்தில் முதல் இலவச உலகளாவிய மென்பொருள் ஆகும்.

இதை உருவாக்கியவர்கள் நமது ஈரோட்டில் உள்ல வாழையக்கார தெருவில் உள்ள VHEEDS TECHNOLOGY SOLUTIONS நிறுவனத்தினர் என்னும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

இவர்களின் இந்த இணையதள அப்ளிகேசன் வெற்றி பெற வாழ்த்துவோம்.  இத நமக்கு அறிமுகப்படுத்தி நம் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் என்று கூறிய வசந்த் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

தமிழன் உருவாக்கிய மென்பொருள் உலகம் முழுவதும் பரவ என்னாலான சிறு முயற்சிதான் இது. இதை உபயோகப்படுத்துவதன் மூலம் நம் தமிழரின்
பெருமை பரவட்டும்.

இணையத்தள சுட்டி

இவர்களை பற்றிய சிறு குறிப்புகள் குறித்து அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை இங்கு கொடுத்திருக்கிறேன்


“Vheeds Technology solutions” என்ற ‘technology startup’யினை செப்டம்பர் 2010’ல் மூன்று நண்பர்கள் சேர்ந்து ஈரோட்டில் ஆரம்பித்தோம். நாங்கள் 2007’ல் எங்களது பொறியியல் கல்வியினை ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்து ஹைதராபாத்தில் உள்ள MNC’ல் பணியமர்த்தபட்டோம். பின்பு ஜூலை 2010’ல் எங்களது பணியை Resign செய்துவிட்டு சொந்த நகரத்தில் எங்களது நிறுவனத்தை ஆரம்பித்தோம். 


தொழில்நுட்பம் மற்றும் அதன் சார்ந்த வளர்ச்சிகள் அனைத்தும் வளர்ந்த நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரிய வர்த்தக நகரங்களுக்கு மட்டும் உரித்தானது என்ற நிலையினை மாற்றி சிறிய நகரங்களும் அதை சேர்ந்த தொழில்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எங்களது எண்ணத்தை நோக்கி உழைத்து கொண்டிருக்கிறோம். அதற்கு ஏற்றார் போல் ஈரோட்டில் உள்ள சிறுத்தொழில் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் அவர்களின் தொழில் முறைக்கு ஏற்ப மென்பொருள் செய்து அவர்களை நவீனத்துவம் ஆக்குகிறோம். மேலும் தமிழகத்தில் இருந்து உலகளாவிய அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மென்பொருள்களை வடிவமைத்து கொண்டிருக்கிறோம். அதன் வகையில் வந்த முதல் மென்பொருள்தான் NYABAG.COM.
நாங்கள் இதுவரை செய்த மென்பொருள் மற்றும் வடிவமைப்புகளை இந்த உரலியில் பார்க்கவும். http://vheeds.com/portfolio.html.
எங்களது முகபுத்தக முகவரி:



இந்த பதிவு அனைவரையும் சென்றடைய உங்கள் ஓட்டுக்களை அனைத்து திரட்டிகளிலும் போடுங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் கூறுங்கள் இதன் மூலம் தமிழரின் பெருமை உலகம் எங்கும் பரவட்டும். 

 நன்றி மீண்டும் வருகிறேன்

7 ஊக்கப்படுத்தியவர்கள்:

மாணவன் said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே,

உங்களின் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...

Mohamed Faaique said...

பகிர்வுக்கு நன்றி ஸார்....
பார்ப்பத்ற்கு சூப்பரா டிசைன் பண்ணியிருக்கு... உள்ளே போய் பார்க்கிறேன்..

மச்சவல்லவன் said...

வாழ்த்துக்கள்.

S.முத்துவேல் said...

நல்ல தகவல்.

அதிரைக்காரன் said...

அன்புள்ள சகோதர்/சகோதரி,

மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

நன்றி.

அன்புடன்,
அதிரைக்காரன்
adiraiwala@gmail.com

ADMIN said...

பகிர்வுக்கு மிக்க நன்றி!

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி...!!! அருமையான அப்ளிகேஷன்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை